தமிழ் தோழர்கள்

தமிழர்களுக்கான ஒரு இணையதளம்

உலக அதிசயங்கள்

 கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர்களான ஹீரோ மற்றும் ஆன்ட்டி பீட்டர் என்ற இருவரும் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைகால உலகின் ஏழு அதிசயங்களை தொகுத்து எழுதியுள்ளார்கள்.

            புராதான கால பொறியாளர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லாத அன்றைய உலகில் எவ்வித அறிவியல் உபகரணங்கள் இன்றி மனித சக்தி ஒன்றின் மூலமே அன்றாடம் புழக்கத்திலுள்ள எளிய சாதாரண உபகரணங்களின் துணையுடன் மரங்கள் கற்கள் உலோகங்கள் இவற்றைக் கொண்டு இந்த அதிசயங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பதே இவற்றின் சிறப்பாகும்.

        இன்றைய அறிவியல் உலகில் சாதிக்க முடியாத இந்த சாதனைகள் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது 7 அதிசயங்களாக வரையறுத்துள்ளனர் காலப்போக்கில் வரலாற்றாய்வாளர்கள் உலக அதிசயங்களை இணைத்து  அவற்றை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர். 

            அதே சமயம் கடந்த 2007 ஆம் ஆண்டு வாக்கில் swiss சேர்ந்த நியூ ஓப்பன் ஓல்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உலகின் அதிசயங்கள் கருதப்படும் மொத்தம் 200 அதிசயங்களை பற்றிய குறிப்புகளை உலக மக்களிடம் எடுத்துக்கூறி பொதுமக்களின் ஓட்டெடுப்பு மூலம் முதல் ஏழு அதிசயங்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.

        இந்த இருநூறு அதிசயங்களுள் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் போட்டியில் கலந்து கொண்டது.

அதுமட்டுமில்லாமல் சுருக்கப்பட்ட கடைசி பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபத்தொரு அதிசயங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது .

அறிவோம் உலகம் பாகம் 2

                            இப்படி மனிதன் தோன்றிய காலம் முதலே படிப்படியாக மனித சரித்திரமும் துவங்கிவிட்டது அதனுடன் இணைந்து அறிவியலும் வளர்ச்சிப் பாதையில் நடைபோட துவங்கிவிட்டது

            துவக்க காலங்களில் மிருகங்களைப் போலவே மனிதன் தனக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி இருக்கிறார் காலம் செல்லச்செல்ல எதிர்பாராமல் ஒரு நாள்அவன் உரசிய பொருட்களிலிருந்து  கிளம்பிய தீப்பொறியில் இருந்து தீயை கண்டுபிடித்து அதை பயன்படுத்தத் துவங்கினான்.

             இதுவே மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும் இவ்வாறு மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடித்த காலம் செல்லச் செல்ல ஒவ்வொன்றாகப் புதுமைகளை கண்டறிந்த மனிதனின் அறிவு வளர்ச்சி அடைந்தது மேலும் மேலும் ஆராய்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் விண்கலம் ஆய்வு செய்யும் அளவிற்கு இன்று அவன் அறிவு வளர துவங்கிவிட்டது.

             அதேபோன்றுதான் மனித இனப்பெருக்கம் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது 20 கோடியாக மட்டுமே இருந்த உலகின் மக்கள்தொகை இன்று மிகப்பெரிய இந்த 2010ஆம் ஆண்டில் சுமார் 692 கோடியாக உயர்ந்து விட்டது இனிமேல் இனப்பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து விடும் என்பது உண்மையிலும் உண்மை 602 கோடி மக்களை தாங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகமானது வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஐரோப்பா ஆஸ்திரேலியா அண்டார்டிகா இடங்களை உள்ளடக்கியது.

         இந்த கண்டங்கள் அனைத்துமே கடல் நீரால் தான் சூழப்பட்டு உள்ளன. அதிகமாக ஏற்படும் மாற்றங்களே ஆகும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன கடலுக்கு அடியில் சீமா  என்ற பெயர் கொண்ட கடினமான பாறைகள் நிறைந்து கொண்டிருக்கின்றன இந்த பாறைகள் மீது தான்  பூமியின் கண்டங்கள் இருக்கின்றன.

         இதை பெரிது பெரிதாக இடம்பெயர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறதாம் கண்டங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் உறுதியாக இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இவை ஒரே இடத்தில் இல்லை கண்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மையும் கூட கண்டங்களும் நகர்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன 

அறிவோம் உலகம் பாகம் 1

                       ஆகாச கங்கை என்று அழைக்கப்படும் இந்த பிரபஞ்சத்தை தான் பால்வெளி அண்டம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் ஒளியும் மேகங்களும் சூழ ஒரு நள்ளிரவில் வானத்தை நாம் அண்ணார்ந்து பார்த்தோமானால் சீரான தன்மை பொருந்திய ஒரு ஒளி வடக்கு தெற்காக ஒரு நதியைப் போல் அமைந்திருப்பதை நாம் காணலாம் இதைத்தான் பால்வெளி அண்டம் என்றும் ஆகாச கங்கை என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.


                   இந்த ஆகாச கங்கையில் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான விண்மீன்கள் நாம் காணும் சூரியனும் ஒரு விண்மீன் தான் ஒரு இடத்தில் மட்டும் 10,000 கோடி விண்மீன்கள் இருப்பதாக அறிவியல் ஆராய்ந்து கணக்கிட்டிருக்கிறார்கள். இது போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள் இந்த அண்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது தான் பேரண்டம் ஆகும். 

                 இப்பேரண்டத்தின்   மற்றொரு இடத்திற்கும் இடையே வெற்று வெளி உண்டு எனவும் கருதப்படுகிறது. இந்தப் பேரண்டம் எப்படி எவ்வாறு உருவாகியது என்பது இன்றளவும் வினவாகவே இருந்து வருகிறது. 

                   பிரம்மாண்டமான பால்வீதி மண்டலத்தின் ஒரு கோள்தான் சூரியன் மற்றும் புதன் சுக்கிரன் பூமி செவ்வாய் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் புளூட்டோ முதலியன பால்வெளி மண்டலத்தின் முக்கிய கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் ஆகும். சூரிய மண்டலத்தின் இந்த ஒன்பது கோள்களும் ஒவ்வொரு வேகத்தில் சூரியனைச் சுற்றி வருவதோடு தன்னைத்தானே சுழன்று வரும் இருக்கின்றன. 

            ஆனால் சூரியனோ தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதை தவிர வேறு எந்தக் கூலியும் சுற்றுவதில்லை தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் ஒரு சிறிய கோவில் தான் நாம் வசிக்கும் பூமியும் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் மிக சிறிய துணைக் கோள் சந்திரன். 

              பூமியின் சுழற்சி வேகத்தில் நாலு மணிக்கு கிட்டத்தட்ட ஆயிரத்து 610 கிலோ மீட்டர்கள் இருக்கின்றன இருக்கின்ற இடத்தில் இருந்தபடியே நாம் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறோம் 15 கோடி கிலோ மீட்டர் ஆழத்தில் பூமி இருந்துகொண்டே சூரியனையும் வட்டமடிக்கும் இதன் வேகம் வினாடிக்கு 30 கிலோ மீட்டர்களாகும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமும் சூரியனைச் சுற்றிவர 365 நாட்களும் ஆகின்றன என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பூமி சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள தாம் விஞ்ஞானிகள் இந்த உலகத்தின் அமைப்பை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
 
                     நாம் வசிக்கும் பூமியின் மேற்புற அமைப்பு மேலோடு கிரஸ்ட் நீரும் நிலமும் சார்ந்தும் கடினமான சிலிகேட் பாறைகளும் இரும்பு மக்னீசியம் கொண்டுள்ள கருவில் மேன்டில் என்று அழைக்கப்படும் இரண்டாம் அடுக்கும் இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 70 கிலோ மீட்டர் முதல் 400 கிலோ மீட்டர் வரை ஆழம் உள்ளதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர் அதற்கும் கீழே உள்ள பூமியின் மையப்பகுதி வெளி உள்ளகம் உள் உலகம் என்று அமைந்துள்ளது என்பதும் விஞ்ஞானிகள் கூற்று.

                   2900 கிலோ மீட்டர் வரை உள்ள வெளி உலகம் பகுதி முழுவதும் இரும்பு நிக்கல் மக்னீசியம் ஆக்சிஜன் கலந்த கனிம குழம்பாக அமைந்துள்ளது அதற்கும் கீழே உள்ள உலகம் பகுதி கடினமான இரும்பு பாறைகள் நிறைந்த உள்ளதாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியின் ஆயுட்காலம் ஆயிரம் கோடி ஆண்டுகள் என்றும் இதில் சுமார் 470 கோடி ஆண்டுகள் கழித்து விட்டதாகவும் இன்னும் 540 கோடி ஆண்டுகள் மட்டுமே பூமியின் மீதமுள்ள வாழ்நாள் என்றும் கூறுகிறார்கள் அதன்பிறகு பூமியானது தான் பிறந்த இயேசு சூரியனிடம் ஐக்கியமாகி விடும்.

                 நாம் கிட்டத்தட்ட 60 கோடி முதல் 70 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தான் பூமி தனது வெப்பம் குறைந்து குளிர்ச்சி அடைய தொடங்கியது. அதன்பின்னர் வளிமண்டலத்தில் பரவியிருந்த நீராவியானது குளிர்ந்து மழையாக மாறி கடைகளை தண்ணீரால் நிறுத்தியது என்றும் பின்னர்தான் உயிர்கள் செலவில் உற்பத்தி ஆகியன என்றும் கூறுகின்றார்கள். உயிரினங்கள் படிப்படியாக தோன்றிய பின்னர் கொரில்லா சிம்பன்சி ஒராங்குட்டான் போன்ற மனித குரங்குகள் உருவாகின இவற்றில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் பரிணாமக் கொள்கை ஆகும்.

தமிழ் பான்ட்ஸ்  (Tamil Fonts)



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ...கீழே விதம் விதமான 170 தமிழ் பாண்ட்ஸ்கள் கொண்ட கோப்பை இணைத்துள்ளேன் .. அனைத்தும் வெவ்வேறு வகையான அழகான தமிழ் பாண்ட்ஸ்கள் .... டவுன்லோட் செய்யும் லிங்கை இணைத்துள்ளேன் டவுன்லோட் செய்து மகிழுங்கள்....



Internet Download Manager V6.12 Build 11 (Pre Activated)





Internet Download Manager புதிய பதிப்புகள் தொடர்கின்றன.. இதற்க்கு முன் உள்ள பதிப்புகளை பயன்படுத்துவோருக்கு நீங்கள் கணினியை ஆரம்பித்தவுடன் Update to New Version என்று வந்திருக்கும், இதோ அந்த புதிய பதிப்பு IDM 6.12 Build 11, நீங்கள் புதிய வெளியீடான IDM- களை பயன்படுத்தினால் Update, Update என்று எப்போதும் உங்கள் கணினியில் தோன்றாது. அடுத்த IDM பதிப்பு வரும்வரை நிம்மதியாய் இருக்கலாம்.








வழிமுறைகள்.
இன்ஸ்டால் செய்யவும், உடனே பயன் படுத்தலாம்.
No Serial, No registration, silent installer!
-எதையும் முழுமையாய் பயன்படுத்தி மகிழுங்கள்.




Click Here To Get The Software

Facebook Tricks (பேஸ்புக் ட்ரிக்ஸ் )


நான் கீழே கொடுத்துள்ள ஒரு வரியை பயன்படுத்தி தாங்கள் உங்களின் பேஸ்புக்கில் நீல நிற ஸ்டேடஸ் போட்டுக்கொள்ளலாம்..





@[1: ]@@[1:[0:1: Your Text Here ]]



இதை பேஸ்புக்கில் காப்பி பேஸ்ட் செய்து Your Text Here   என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான வரியை தட்டச்சு செய்து என்டர் கொடுத்தால் உங்கள் ஸ்டேடஸ் நீல நிறத்தில் தோன்றுவதை பார்க்கலாம் ....



நான் கீழே கொடுத்துள்ள இணையத்தளம் மூலம் தாங்கள் பேஸ்புக் சாட் பாக்ஸில் விதம் விதமாக தட்டச்து செய்து உங்கள் நண்பர்களை அசத்தலாம்.. 










இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது.

India1907Flagகோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள், வந்தேமாதரம் என்ற வார்த்தைகள், கதிர்வீசும் ஆதவன், பிறைசந்திரன், நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது.

பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. 8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக, வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.

1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை (5) பச்சைநிற பட்டை (4 ), அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும், வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும், நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன. இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை.

பின்னர் 1921 ம் ஆண்டு விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி, பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார். இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது.

ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

AzadHindFlagஅதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்குப் பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது.. இரண்டாம் உலகப் போரின்போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை பயன்படுத்திய இந்தக் கொடி தேசியக் கொடியாக இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.

அடர் காவி, அடர் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும், மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது.

ஏற்றப்பட்டது 
முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப் பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, காதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.

IP

Search This Blog

About me

என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு நெஞ்சம்..

Total Pageviews

Popular Posts

Followers